sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டுமகிழ்ச்சியில் கொண்டாடுகிறது போலீஸ்

/

 விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டுமகிழ்ச்சியில் கொண்டாடுகிறது போலீஸ்

 விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டுமகிழ்ச்சியில் கொண்டாடுகிறது போலீஸ்

 விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டுமகிழ்ச்சியில் கொண்டாடுகிறது போலீஸ்


ADDED : ஜன 02, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,ஜன.2-

கோவை மாநகரில் விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்ததால், மாநகர போலீசார் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நகர் முழுவதும் 1,594 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள், வழிபாட்டு தலங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை நெரிசல் ஏற்படுவதை குறைக்கவும் போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மதுபோதையில் அதிவேகமாகவும் அலட்சியமாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க முக்கிய சாலைகளில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும், 15 இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அதிவேகமாக ஓட்டியதாக 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நகரில் குற்ற சம்பவங்கள், விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இது இனிமையான புத்தாண்டாக அமைந்தது என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us