/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனூர், சுந்தராபுரத்தில் போலீசார் திடீர் சோதனை
/
போத்தனூர், சுந்தராபுரத்தில் போலீசார் திடீர் சோதனை
ADDED : மார் 23, 2025 11:25 PM
போத்தனூர் : கோவை, போத்தனூர், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் உள்ளதா என, நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
மாலை, 5:30 மணிக்கு போலீஸ் உதவி கமிஷனர் கனகசபாபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், ரவிதலைமையில், எஸ்.ஐ., கள்முத்துகுமார், ராமர், எஸ்.எஸ்.ஐ., ஜெயபாலன் உள்பட 40 போலீசார், போத்தனூர் மெயின் ரோடு, சர்ச் ரோடு, சாரதா மில் ரோடு, மதுக்கரைமார்க்கெட் ரோடு பகுதிகளில், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த, கடைகளின் விளம்பர போர்டுகளை அகற்ற அறிவுறுத்தினர். இரவு 8:30 மணி வரை இச்சோதனை நீடித்தது.