/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குறைதீர்ப்பு முகாம் 81 மனுக்களுக்கு தீர்வு
/
போலீஸ் குறைதீர்ப்பு முகாம் 81 மனுக்களுக்கு தீர்வு
ADDED : பிப் 22, 2024 06:11 AM
கோவை: மாவட்ட போலீஸ் சார்பில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில், 81 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, சமரச நடவடிக்கை எடுக்கும் நோக்கில், இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடந்த முகாமில், 81 மனுக்கள் மீது விசாரணை, மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், இரு மனுக்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. 63 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. 16 மனுக்கள் மேல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன. முகாமுக்கு, மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமை வகித்தார்.