sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: நெகமம் போலீஸ் விசாரணை

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: நெகமம் போலீஸ் விசாரணை

மூதாட்டியிடம் நகை பறிப்பு: நெகமம் போலீஸ் விசாரணை

மூதாட்டியிடம் நகை பறிப்பு: நெகமம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 22, 2024 10:50 PM

Google News

ADDED : பிப் 22, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்:நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவில் திருவிழாவில், மூதாட்டியிடம் நகை பறித்தது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில், கடந்த வாரம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், கப்பளாங்கரையை சேர்ந்த வள்ளியம்மாள், 75, பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

கும்பாபிேஷக விழா நெரிசலில், அவர் அணிந்திருந்த, 4.5 பவுன் நகை காணாமல் போயுள்ளது. வீட்டிற்கு சென்ற பின், கழுத்தில் நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள், வீட்டில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

அதன்பின், நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கும்பாபிேஷக விழா வீடியோ காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கோவில் திருவிழாக்களில், பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை குறி வைத்து திருடும் கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us