sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சைபர் மோசடி பேர்வழியை டில்லியில் 'அள்ளியது' போலீஸ்

/

சைபர் மோசடி பேர்வழியை டில்லியில் 'அள்ளியது' போலீஸ்

சைபர் மோசடி பேர்வழியை டில்லியில் 'அள்ளியது' போலீஸ்

சைபர் மோசடி பேர்வழியை டில்லியில் 'அள்ளியது' போலீஸ்


ADDED : ஜன 27, 2025 03:57 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'பெட்எக்ஸ்' மோசடியில் தொடர்புடைய வடமாநில நபரை, கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை, செலக்கரிசலைச் சேர்ந்தவர் ரித்திகா, 25. கடந்த செப்டம்பரில் இவர் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டவர், பெட்எக்ஸ் கூரியர் நிறுவன ஊழியர் எனவும், ரித்திகாவின் ஆதார் எண் வாயிலாக போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிறிது நேரத்தில், 'ஸ்கைப்' வாயிலாக வீடியோ காலில் பேசியவர், மும்பை சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி, போதைப்பொருள் அனுப்பியது தொடர்பாக, வங்கிக்கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய, அதில் உள்ள பணம் முழுதையும் உடனடியாக அவர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தினார். இல்லை எனில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுவீர் என்றார்.

வங்கிக்கணக்கில் இருந்த, 10 லட்சம் ரூபாயை அவர்களுக்கு ரித்திகா அனுப்பினார். நீண்ட நாட்களாகியும் பணம் திரும்பவில்லை. அவர்கள் அழைத்த எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரித்திகா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

தனிப்படை போலீஸ் விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது டில்லியைச் சேர்ந்த கோபிகுமார், 42, என தெரிந்தது. டில்லியில் அவரை கைது செய்த தனிப்படையினர், கோவை அழைத்து வந்தனர். தொடர் விசாரணையில், போலீஸ் ஸ்டேஷன் 'செட் அப்'பில் வீடியோ காலில் பேசி மிரட்டி, 11 பேரிடம், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது.

மோசடி பணத்தில், அவர் டில்லியில் இரு நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். அவரிடம் ஆறு மொபைல்போன்கள், ஏழு ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us