ADDED : ஜூலை 03, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
கோவை:தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 28 ம் தேதி நடத்தப்பட்டது. கோவையில், 2,97,615 குழந்தைகளுக்கு போட திட்டமிட்டனர். அதில், 11,207 பேர் விடுபட்டனர்.
அவர்களுக்கு, அடுத்த 3 நாட்கள் வீடு வீடாக போய் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்படியும் விடுபட்டவர்களை குறிப்பெடுத்து, தொலைபேசியில் அழைத்து பேசி, வரும் சனிக்கிழமைக்குள் போட்டு விடுமாறு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
