sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 5 மணி நேரம் நீதிபதி கேள்வி

/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 5 மணி நேரம் நீதிபதி கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 5 மணி நேரம் நீதிபதி கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 5 மணி நேரம் நீதிபதி கேள்வி


ADDED : ஏப் 06, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர் கோவை மகளிர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, 29, சபரிராஜன், 29, உட்பட ஒன்பது பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மகளிர் கோர்ட்டில், இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்தன.

தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்க, ஒன்பது பேரையும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த, நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஆஜராகிய அவர்களிடம், சாட்சி விசாரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார்.

காலை, 10:30 மணிக்கு துவங்கி மாலை, 3:45 மணி வரை நீதிபதி கேள்விகளை கேட்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us