sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பொங்கல் வேட்டி, சேலை வரும் 31 வரை வாங்கலாம்'

/

'பொங்கல் வேட்டி, சேலை வரும் 31 வரை வாங்கலாம்'

'பொங்கல் வேட்டி, சேலை வரும் 31 வரை வாங்கலாம்'

'பொங்கல் வேட்டி, சேலை வரும் 31 வரை வாங்கலாம்'


ADDED : ஜன 14, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ''பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களுக்கு, பொங்கலுக்கு பிறகு வழங்குமாறு, இன்னும் உத்தரவு வரவில்லை,'' என, கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில், 11.12 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த முறை பொங்கல் தொகுப்புடன், பணம் கொடுக்காததால் பொங்கல் தொகுப்பு வாங்குவதில் கார்டுதாரர்கள் பலர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்களின் வீட்டுக்கே சென்று, பொங்கல் தொகுப்பு வாங்கி கொள்ளும்படி, ரேஷன்கடை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், இதுவரை, 8.98 லட்சம் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பு வாங்கி உள்ளனர். கடைக்கு வந்து வாங்க முடியாத முதியவர்களுக்கு, வீட்டுக்கு சென்று கொடுத்து இருக்கிறோம்.

வேட்டி, சேலை 70 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 70 ஆயிரம் வேட்டி சேலைகள் வந்துள்ளன. வேட்டி சேலையை பொறுத்தவரை, 31ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வாங்காதவர்களுக்கு, பொங்கலுக்கு பிறகு கொடுக்குமாறு உத்தரவு வரவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us