/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
/
மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED : மே 23, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை சக்தி மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூன் 6ம் தேதி காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் புனருத்தாரண கும்பாபிஷேக திருப்பணி பூஜை நடைபெறுகிறது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, கோவில் கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தனர்.