sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையம் வழங்கியது வசதி


ADDED : மார் 20, 2024 12:43 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், வரப்போகும் தேர்தலில் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று, ஓட்டளிப்பதற்கான சிரமத்தை தவிர்க்க, தபால் ஓட்டு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இதற்கு ஒவ்வொருவரிடமும், அவர்களது சுய விருப்பத்தை பெறுவதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் 12டி மற்றும் வாக்காளர் பட்டியலுடன் வீடு தேடி வருவர்.

படிவத்தை படித்துப் பார்த்தோ அல்லது படிக்கக் கேட்டோ ஒப்புதல் தெரிவிக்கலாம் அல்லது, கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வரும், 24ம் தேதிக்குள் நேரில் சென்று, படிவம்-12டி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

இத்தகவலை, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us