/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 01, 2025 05:06 AM

பொள்ளாச்சி : எட்டு மணி நேர வேலை வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நிறைவேற்றினர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், பொள்ளாச்சி கோட்டம் சார்பில், தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சாந்தி தலைமை வகித்தர். செயலாளர் சுருளிவேல், உதவி செயலாளர் சிவதாசன், அமைப்புச் செயலாளர் நாராயணசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர்.
ஐ.டி.சி.,யை கைவிட வேண்டும். எட்டு மணி நேர வேலை வேண்டும், ஓய்வூதியம் முழுமையாக விதிகளின்படி வழங்க வேண்டும், பணிக்கொடை குறைந்தபட்சம் எனும் விதியை மாற்றுதல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பொருளாளர் முஸ்தபா, நன்றி கூறினார்.