/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 06, 2025 09:48 PM

பொள்ளாச்சி; பணிபாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், பொள்ளாச்சியில், பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டை ஒரு மணி நேரம் புறக்கணித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல மகளிர் அணிச் செயலாளர் ரேவதி, தலைமை வகித்தார். முன்னதாக, கல்வி மாவட்ட செயலாளர் வடிவேல்குமார், வரவேற்றார். மாவட்டத் தலைவர் முகமதுகாஜாமுகைதீன், கோரிக்கைகள் குறித்து விளக்கிப்பேசினார். கல்வி மாவட்ட துணைத் தலைவர் பங்காரு நன்றி கூறினார்.

