/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து சரிவு
/
ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து சரிவு
ADDED : மே 26, 2025 11:18 PM
மேட்டுப்பாளையம்,; நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக ஊட்டி உருளைக் கிழங்குகளின் வரத்து குறைந்தது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் உருளைக்கிழங்குகளை அறுவடை செய்து மேட்டுப்பாளையம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு உருளைக்கிழங்குகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
1500 முதல் 1800 வரை மூட்டைகள் வந்த நிலையில் நேற்று 500 மூட்டைகள் மட்டுமே வந்தன. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை அதிகபட்சமாக ரூ.1900க்கு விற்பனை செய்யப்பட்டது.