/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
ADDED : பிப் 24, 2026 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. இதனையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த செய்முறை தேர்வை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் துவக்கி வைத்தார். இதே போல், வால்பாறை, அட்டகட்டி உள்ளிட்ட ஐந்து மையங்களில் செய்முறை தேர்வு நடைபெற்றது.

