தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 20, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது. இதில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

நடப்பாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொது தேர்வு, மார்ச் மாதத்தில் துவங்குகின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்குகிறது.

இதில் கோவை மாவட்டத்தில், 33,659 மாணவ - மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 35,975 மாணவ - மாணவியர் பிளஸ் 1 தேர்வும் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று முன் தினம் துவங்கின.

வரும் 24ம் தேதி வரை நடக்கின்றன. கோவையில் மொத்தம், 252 தேர்வு மையங்களில் நடக்கும் செய்முறை தேர்வில், 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us