/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு
/
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஏப் 12, 2025 11:38 PM
கோவை: கோவை மாவட்ட போலீசில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.
கோவை மாவட்ட போலீசாரின் மாதாந்தரி குற்ற விவாதிப்பு கூட்டம், நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள். இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், எஸ்.பி., கார்த்திகேயன், 4 இன்ஸ்பெக்டர், 15 எஸ்.ஐ.,க்கள், 10 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 10 தலைமை காவலர்கள் உள்ளிட்ட69 போலீசாருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

