sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

50 சவரன் நகையை ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு

/

50 சவரன் நகையை ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு

50 சவரன் நகையை ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு

50 சவரன் நகையை ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு


ADDED : செப் 01, 2025 07:24 AM

Google News

ADDED : செப் 01, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பயணி தவற விட்ட, 50 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கோவை ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடையில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு, 11:30 மணிக்கு வந்து சென்றது.

பயணியர் அனைவரும் சென்ற பின், பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் மணிகண்டன், நடைமேடையில் கிடந்த கைப்பை ஒன்றை கண்டார். அதில், 50 சவரன் நகை, 11,000 ரூபாய், மொபைல் போன் இருந்தன.

சிறிது நேரத்தில், கைப்பையில் இருந்த மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை கோவை சாரதா மில் ரோட்டை சேர்ந்த ரவிக்குமார், 53, என்றும், கைப்பையை தவற விட்டதாக தெரிவித்தார்.

அவரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைத்து, உரிய ஆவணங்களை சரிபார்த்த பின், பணம், நகை அடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸ்காரர், மணிகண்டனை பாராட்டி, ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டன்ட் சவுரப்குமார் 1,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us