/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழா நாளை துவக்கம்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழா நாளை துவக்கம்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழா நாளை துவக்கம்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழா நாளை துவக்கம்
ADDED : மே 01, 2025 11:35 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 49வது பிரமோத்ஸவ விழா நாளை மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விஸ்வக்சேனா ராதனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது.
வரும், 4ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:25 மணிக்குள் ரிஷிப லக்னத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது.
வரும், 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை தினமும் காலையில் திருப்பல்லக்கில் பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலையில் வாகனங்களில் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும், 10ம் தேதி காலையில் பெருமாள், மோகினி அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.11ல் தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியும், மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் பெருமாள் வீதி உலா செல்கிறார்.
வரும், 12ல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் தேரில் ஏலப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தல், மாலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை தீர்த்தவாரி, மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப பல்லக்கு திருவீதி உலா, வரும், 14ல் விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.