/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்பருவ கரும்பு சாகுபடி : உடனடியாக செய்யணும்
/
முன்பருவ கரும்பு சாகுபடி : உடனடியாக செய்யணும்
ADDED : ஜன 29, 2024 12:25 AM
கோவை:கோவையில் கடந்த சில வாரங்களாக வெயில் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் பகல் நேர வெப்பநிலை வழக்கமாக அதிகரித்துள்ளது.
வரும் வாரங்களில், 32 - 33 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை, 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும்இருக்கும்.
மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து பயிர் கழிவு மூடாக்கு இடவேண்டும். அறுவடை நிலையிலுள்ள பயிர்களில், உடனடியாக அறுவடை செய்து நன்கு உலர்த்தி சேமிக்கவும்.
தற்போது நிலவும் காலநிலையை கருத்தில்கொண்டு, முன்பருவ கரும்பு சாகுபடியை உடனடியாக மேற்கொள்வதன் வாயிலாக, அதிக மகசூல் பெறலாம். நீர்பாசனம் உள்ள இடங்களில் மட்டும், இறவை மக்காச்சோள விதைப்பினை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.