sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்

/

மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்

மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்

மழை கால முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தீவிரம்: கலெக்டர்


ADDED : ஜூன் 13, 2025 09:36 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூர் தனியார் திருமண மண்டபத்தில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமில், இலவச பட்டா, ரேஷன் கார்டு, தையல் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, 149 பயனாளிகளுக்கு, 6 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 265 ரூபாய் மதிப்பீட்டில் கலெக்டர் வழங்கினார். அதன்பின், மக்களிடம் மனுக்கள் பெற்றார்.

கலெக்டர் கூறியதாவது:

சுகாதார துறை வாயிலாக கேன்சர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நேரத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கியிருக்கும் நீரை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். அப்போது தான், நோய் தொற்றுகளை தடுக்க முடியும். கோவை மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

மழை அதிகம் உள்ள பகுதிகளுக்கு, சுற்றுலா பயணியர் செல்ல தற்காலிக தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us