sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீபாவளிக்கு இனிப்பு, காரங்கள் தயாரிப்பு; உரிமம் பதிவு செய்வது அவசியம் 

/

தீபாவளிக்கு இனிப்பு, காரங்கள் தயாரிப்பு; உரிமம் பதிவு செய்வது அவசியம் 

தீபாவளிக்கு இனிப்பு, காரங்கள் தயாரிப்பு; உரிமம் பதிவு செய்வது அவசியம் 

தீபாவளிக்கு இனிப்பு, காரங்கள் தயாரிப்பு; உரிமம் பதிவு செய்வது அவசியம் 


ADDED : அக் 07, 2025 09:04 PM

Google News

ADDED : அக் 07, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக, மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தீபாவளி தினத்தன்று, இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை வாங்கி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் உண்டு.

இதை கருத்தில் கொண்டு, இனிப்பகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பலகார தயாரிப்பில் மும்முரம் காட்டுவர். இந்நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், முன்கூட்டியே இனிப்பு தயாரிப்போரிடம் உரிய அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பாக, இனிப்பு, கார வகைகளில், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை சேர்க்கக்கூடாது. தயாரிப்பு, காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதலின் போது, பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும்.

பலகாரங்கள் தயாரிக்குமிடம் மற்றும் விற்கும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட பலகாரங்களை கையால் தொடுவதை தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்று பெறுவதுடன், அவற்றை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:

தீபாவளி இனிப்புகள், கார வகைகள் தயாரிப்புக்கு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில், இனிப்பு, காரவகைகளை தயாரித்து விற்க வேண்டும்.

தீபாவளி இனிப்பு வகைகளில் குறைகள் கண்டறிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்துவர். தற்காலிக இனிப்பு தயாரிப்பில் ஈடுபடுவோரும் உரிமம் மற்றும் பதிவு பெற வேண்டும். இதற்காக முன்கூட்டியே உணவு பாதுகாப்பு அலுவலர்களால், சம்பந்தப்பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்களும் கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us