sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 20, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய, வேளண்மை இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, கோவை மாவட்ட வேளண்மை இணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு, அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் சேர ராபி பருவ மக்காச்சோளம், மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மேலும், சோளம் பயிருக்கு டிசம்பர் 16-ம் தேதி வரை காப்பீடு செய்ய கடைசி நாள். சோளத்திற்கு ரூ.163, மக்காசோளத்திற்கு ரூ.541 மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு ரூ.231, ஏக்கருக்கு செலுத்த வேண்டும். வங்கிக்கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும், பொது இ- சேவை மையங்கள் வாயிலாகவும் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் காப்பீடு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையயை செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us