sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

/

அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்


ADDED : செப் 19, 2024 10:54 PM

Google News

ADDED : செப் 19, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், : அத்திக்கடவு-அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்க, வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் ஈஸ்வரி அம்மாள் சேரன் திருமண மண்டபத்தில், அத்திக்கடவு - அவிநாசி 2ம் கட்ட திட்டத்தின் உரிமைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்த்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காரமடை, பவானிசாகர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை, தமிழக அரசு அத்திக்கடவு-அவிநாசி 2ம் கட்ட திட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால் திட்டப்பணிகளுக்கு, அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. எனவே முன்னுரிமை கொடுத்து, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி, ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், இத்திடட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப, ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us