/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காஸ் வினியோகத்தில் தொழில்துறைக்கு முன்னுரிமை'
/
'காஸ் வினியோகத்தில் தொழில்துறைக்கு முன்னுரிமை'
ADDED : மார் 13, 2026 05:57 AM
கோவை: தொழில்நிறுவனங்களுக்கு காஸ் வினியோகத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என,இந்திய தொழில்முனைவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தேசிய செயலாளர் ரகுநாதன் கூறியதாவது:
காஸ் பற்றாக்குறை நீடித்தால், எம்.எஸ்.எம்.இ., துறை திணறும். எனவே அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும்.
எம்.எஸ்.எம்.இ., மற்றும் அத்தியாவசிய தொழில்களுக்கு காஸ் வினியோகத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். தொழில்துறை பயன்படுத்தும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு கலால் மற்றும் வாட் வரிகளை தற்காலிகமாக குறைக்க வேண்டும்.
மின் கட்டணங்களில் கூடுதல் சலுகை மற்றும் உதவித் தொகை வழங்க வேண்டும். வர்த்தக காஸ் சிலிண்டர்கள் பதுக்கல், திசைதிருப்பல் மற்றும் கள்ளச் சந்தையை கடும் நடவடிக்கையால் கட்டுப்படுத்த வேண்டும்.
தொழில்துறை மையங்களில், குழாய்வழி இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.,) வினியோகத்தை விரிவுபடுத்தி, அவசர கையிருப்பு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

