ADDED : ஏப் 11, 2025 10:58 PM
போத்தனூர்; போத்தனூர் அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விண்ணப்ப விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ஏட்டு ரமேஷ், கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு கள ஆய்வுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். கிருஷ்ணமூர்த்தி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை, ரமேஷிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர்.
கூடுதல் எஸ்.பி., திவ்யா முன்னிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ், சிறையிலடைக்கப்பட்டார். துறை ரீதியாக எஸ்.பி., கார்த்திகேயன், ஏட்டு ரமேஷை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

