sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை

/

சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை

சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை

சிறைக்குள் கைதி கொலை? 10 பேரிடம் விசாரணை


ADDED : பிப் 02, 2025 01:49 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, 10 பேர் மீது சந்தேகம் இருப்பதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ், 33. இவர், 2012ல் திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜன., 27ல் சிறை வளாக தொழிற்சாலை கழிப்பறைக்குள், சுயநினைவின்றி கிடந்ததாக, கோவை அரசு மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர். ஏசுதாஸ் உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில், கழுத்து எலும்பு உடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

ரேஸ்கோர்ஸ் போலீசார் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து, நான்கு தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர். கோவை, மாஜிஸ்திரேட் கிருத்திகாவும் விசாரணை நடத்தினார்.

மூன்று முதல் நான்கு பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலையில் மேலும், 10 பேர் மீது, போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. ஒவ்வொருவரிடமும் விசாரணை நடக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக துணை சிறை அலுவலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், முதல் நிலை தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தற்கொலைக்கு வாய்ப்பில்லை


போலீசாரின் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில், 'தற்கொலை செய்பவரின் கழுத்து எலும்பு உடைய வாய்ப்பில்லை' என்கிறார், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் எட்வின் ஜோ. அவர் கூறுகையில், ''துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால், கழுத்து எலும்பு உடைய வாய்ப்பில்லை. 90 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் எலும்பு முறிவு ஏற்படும். தானே கழுத்தை இறுக்கியும், தற்கொலை செய்து கொள்ள முடியாது. கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், அது தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை. இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியிருந்தால், எலும்பு முறிந்து இருக்கலாம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us