/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பலாத்கார வழக்கு காணொலி வாயிலாக கைதிகள் ஆஜர்
/
மாணவி பலாத்கார வழக்கு காணொலி வாயிலாக கைதிகள் ஆஜர்
மாணவி பலாத்கார வழக்கு காணொலி வாயிலாக கைதிகள் ஆஜர்
மாணவி பலாத்கார வழக்கு காணொலி வாயிலாக கைதிகள் ஆஜர்
ADDED : ஜன 22, 2026 05:04 AM
கோவை: கோவையில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூவரும், நேற்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை ஏர்போர்ட், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்தாண்டு, நவ.2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவி, ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்தார். அப்பகுதிக்கு மொபட்டில் வந்த மூன்று நபர்கள், மாணவியை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து தப்பினர்.
இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ், 30, கார்த்திக்,21, மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். கைதான மூவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மகளிர் கோட்டில், நீதிபதி சுந்தர்ராஜ் முன், இம்மூவரும் நேற்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை, 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜரானார்.

