sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்

/

தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்

தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்

தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்


ADDED : அக் 15, 2025 11:40 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் இயக்கப்படும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், விபத்து குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், '108' ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நிகராக, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி போட்டு, சம்பவ இடத்துக்கு விரைகின்றன.

பெரும்பாலான தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில், அவசர மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் இருப்பு வைக்கப்படாமல் உள்ளது. இதனால், சில நேரங்களில், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை.

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் என, அடிப்படை கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய மருத்துவ பணிகள் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us