/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய், பூனையால் பிரச்னை; பெண்ணுக்கு கொலை மிரட்டல்
/
நாய், பூனையால் பிரச்னை; பெண்ணுக்கு கொலை மிரட்டல்
ADDED : அக் 21, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் கலங்கல் ரோடு நட்ராஜ் நகரை சேர்ந்தவர் மதுமிதா,24. இவரது வீட்டருகே வசிப்பவர் பாலமுருகன்,43. மதுமிதா வீட்டருகே வரும் நாய்களுக்கு சாப்பாடு வைப்பது வழக்கம். இதற்கு பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.
சம்பவத்தன்று பாலமுருகனுக்கு சொந்தமான காருக்கு அடியில் பூனை படுத்து இருந்தது. அப்போது, காரின் வயர் ஒன்று அறுந்து விட்டதாகவும், அதற்கு காரணம் மதுமிதா தான் என்று கூறி, பாலமுருகன் அப்பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். சூலுார் போலீசார் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.