sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

2.40 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்! 2 மாதங்களில் முடிக்க இலக்கு

/

2.40 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்! 2 மாதங்களில் முடிக்க இலக்கு

2.40 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்! 2 மாதங்களில் முடிக்க இலக்கு

2.40 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்! 2 மாதங்களில் முடிக்க இலக்கு


ADDED : அக் 07, 2025 11:37 PM

Google News

ADDED : அக் 07, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களில் 2.40 லட்சம் மரக்கன்றுகளை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவன வளாகங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சியில் உள்ள நர்சரி பண்ணையில் வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி ஆகிய செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியங்களில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாற்றங்கால் பண்ணை என்பது நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவுக்குத் தயார் செய்யும் இடம். இப்பண்ணைகளில், நாற்றுகளை சரியான முறையில் பராமரிப்பதால், அவை ஆரோக்கியமாக வளர்கின்றன. இயற்கையான சூழலை பேணி, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடிகிறது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள, 12 தாலுகாக்களில் இரு மாதங்களுக்கு தாலுகாவுக்கு மாதம் தலா, 10,000 நாற்றுகள் வீதம் உற்பத்தி செய்ய, கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, 24 நர்சரிகளில் 10,000 நாற்றுகள் வீதம், 2.40 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள், 6 அடி உயரம் வளர்ந்த பின், 2026--27-ம் ஆண்டில் சாலையோரம், ஆற்றங்கரையோரம், அரசு அலுவலகங்கள், கனவு இல்ல வீடுகள், கல்வி நிறுவனங்களில் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us