sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கீரணத்தத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சபை புறக்கணிப்பு

/

கீரணத்தத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சபை புறக்கணிப்பு

கீரணத்தத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சபை புறக்கணிப்பு

கீரணத்தத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கருப்பு பேட்ஜ் அணிந்து கிராம சபை புறக்கணிப்பு


ADDED : ஜன 27, 2025 12:39 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கோவை மாநகராட்சி உடன் கீரணத்தம் ஊராட்சியை, இணைப்பதை கண்டித்து, பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கிராம சபையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியுடன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த, கீரணத்தம் ஊராட்சி இணைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

கீரணத்தம் அருகே சாம்பிராணி குட்டை பகுதியில், கிராம சபை கூட்டம் நேற்று துவங்கியது. தனி அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், 'கடந்த அக்., 2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் அனுப்பினோம். ஆனாலும் அதையும் மீறி, கடந்த டிச., 24ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவில் இந்த அரசாணையை வாபஸ் பெறாவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்.

கீரணத்தம் ஊராட்சியை, மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்கிற ஒரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், கூட்ட புத்தகத்தில் யாரும் கையெழுத்திட மாட்டோம்,' என்றனர்.

தனி அலுவலர் தனலட்சுமி பேசுகையில், ''நீங்கள் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். ஆனால் மற்ற தீர்மானங்களையும் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுங்கள்,'' என்றார்.

கிராம மக்கள் ஆவேசமாக புகார் கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். 'யாரும் கையெழுத்திட மாட்டோம்,' என்றனர்.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். தாசில்தார் குமரி ஆனந்தன் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us