sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 27, 2025 11:58 PM

Google News

ADDED : மார் 27, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: வடவள்ளியில், உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் மற்றும் தமிழ் சமுதாய இலக்கிய அமைப்புகள் சார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி முழக்கப்போராட்டம் நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், ஏப்., 4ம் தேதி, குடமுழுக்கு நடக்கிறது.

இந்நிலையில், உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் மற்றும் தமிழ் சமுதாய இலக்கிய அமைப்புகள் சார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி, முழக்கப்போராட்டம், வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு, தமிழ் காப்பு கூட்டு இயக்கம் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும்.

தமிழக அரசு அனுமதிக்காவிட்டால், யாகசாலையில் நுழைந்து தமிழில் பூஜைகள் நடத்துவோம் என, கோஷங்கள் எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us