sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; கிராம மக்கள் முடிவு கிராம மக்கள் முடிவு

/

ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; கிராம மக்கள் முடிவு கிராம மக்கள் முடிவு

ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; கிராம மக்கள் முடிவு கிராம மக்கள் முடிவு

ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; கிராம மக்கள் முடிவு கிராம மக்கள் முடிவு


ADDED : பிப் 16, 2024 11:16 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:நாரணாபுரம் ஊராட்சியில், ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையம் மயானம் செல்லும் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே இந்த பாதையை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் தடையின்றி மயானம் செல்வதற்கு உதவும்படி கிராம மக்கள் சார்பில், அன்னுார் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், கோவை கலெக்டர் மற்றும் தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக மனு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னுார் தாசில்தார், கடந்த டிசம்பரில், 'நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க, கிராம நிர்வாக அலுவலர், நில அளவர் மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல மாதங்களாக தொடர்ந்து தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிறோம்.

ஆனால் நில அளவீடு செய்யவும் ஆக்கிரமிப்பை அகற்றவும் வருவாய் துறையினரும் ஊரக வளர்ச்சித் துறையினரும் தயக்கம் காட்டுகின்றனர்.

விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us