sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடையை மீறி கோவையில் ஊர்வலம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது

/

தடையை மீறி கோவையில் ஊர்வலம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது

தடையை மீறி கோவையில் ஊர்வலம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது

தடையை மீறி கோவையில் ஊர்வலம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை கைது

2


ADDED : டிச 21, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 21, 2024 07:02 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட, 2,000 பேரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா, சமீபத்தில் மரணம் அடைந்தார்.

அவரது இறுதி ஊர்வலத்துக்கு, போலீசார் அனுமதி அளித்ததை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில், நேற்று மாலை கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில், கண்டன பேரணி நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். காந்திபுரம், கிராஸ்கட் சாலை வழியாக சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் வழியே செல்ல திட்டமிட்டிருந்தனர்.

வி.கே.கே.மேனன் சாலையிலிருந்து பேரணி துவங்கி, காந்திபுரம் சிக்னலை கடக்க முயன்ற போது, தடையை மீறி பேரணி நடத்தியதாக, பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us