/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையை மீறி இன்று கள் இறக்கும் போராட்டம்
/
தடையை மீறி இன்று கள் இறக்கும் போராட்டம்
ADDED : ஜன 21, 2026 05:02 AM
அன்னூர்: 'தடையை மீறி இன்று கள் இறக்கும் போராட்டம் நடைபெறும்,' என, தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவதற்கும், விற்கவும், பருகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள்ளை நிரந்தரமாக நீக்க வேண்டும். கைது நடவடிக்கைகளை போலீசார் கைவிட வேண்டும்.
கள்ளை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும். இதுவரை கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஜன. 21ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பொன்னே கவுண்டன் புதூரில் தடையை மீறி கள் இறக்கி வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

