/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு பி.எஸ்.ஜி., கவுரவம்
/
ஆசிரியர்களுக்கு பி.எஸ்.ஜி., கவுரவம்
ADDED : ஏப் 05, 2025 11:27 PM

கோவை: பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
2024ம் ஆண்டிற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளில், ஆசிரியர்களின் பங்களிப்புகளை பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டன.
பி.எஸ்.ஜி., கல்வி ஆராய்ச்சி மற்றும் சிறப்பு மையத்தின் இயக்குனர் ருத்ரமூர்த்தி, கற்பித்தல், தொழில்துறை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திறன்கள் மற்றும் வருவாய் திறனை மேம்படுத்தும் திறன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை, வலியுறுத்தி பேசினார்.
செயலாளர் கண்ணையன்,முதல்வர் பொறுப்புசெங்குட்டுவன், துணை முதல்வர்கள் ஜெயந்தி, உமாராணி, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

