/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்துறையில் மக்கள் தொடர்பு முகாம்
/
பாலத்துறையில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : நவ 14, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை, மதுக்கரையை அடுத்த பாலத்துறையில், மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ரூ. 1.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ., சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர், மதுக்கரை தாசில்தார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, ஊரக வளர்ச்சி, நுகர்வோர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண், ஆதி திராவிடர் நலன், மகளிர் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பங்கேற்றனர்.

