sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி

/

தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி

தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி

தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 29, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; தெரு விளக்கு இல்லாததால், சூலுார் டாக்டர்ஸ் காலனி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சூலுார் பேரூராட்சி, 14 வது வார்டுக்கு உட்பட்டது டாக்டர்ஸ் காலனி. இங்கு, ஏராளமான வீடுகள் உள்ளன.

இப்பகுதிக்கு செல்லும் வீதியில், பாதி தூரத்துக்கு மட்டுமே மின் விளக்குகள் உள்ளன. மீதி இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து உள்ளது. இதனால், மக்கள் அப்பகுதியை கடந்து செல்ல அச்சப்பட வேண்டிய சூழல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்டது எங்கள் குடியிருப்பு பகுதி. சுகந்தி நகரில் இருந்து எங்கள் பகுதிக்கு செல்லும் தெருவில், பாதி தூரத்துக்கு மின் விளக்குகள் இல்லை.

இதனால், அப்பகுதி முழுக்க இருள் சூழ்ந்து உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் பாதிப்பும், சமூக விரோதிகளால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இரவில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அந்த இடத்தை கடந்து நடந்து வர முடியாமல் அச்சப்படுகின்றன. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எங்கள் அவதி தொடர்கிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us