/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்கிரீட் ரோடு போடுங்க : பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கான்கிரீட் ரோடு போடுங்க : பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 12:30 AM
கோவை: மாநகராட்சி, 46வது வார்டுக்கான சிறப்பு கூட்டம், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையை பிரதானமாக மக்கள் முன்வைத்தனர். தொடர்ந்து, மழைநீர் வடிகால் தேவை, வரியினங்களில் பெயர் மாற்றம் குறித்த மனுக்களை அளித்தனர்.
கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
48வது வார்டுக்கான கூட்டம், சித்தாபுதுார் ஐயப்பா சேவா சங்கத்தில் நடந்தது. மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தார் ரோடு விடுபட்ட இடங்களில் சிமென்ட் கான்கிரீட் ரோடு போட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. சி.கே., காலனியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரினர்.
கவுன்சிலர் பிரபா பேசுகையில்,''சி.கே., காலனி பகுதி தாழ்வாக இருப்பதால் மழைநீர் 'பம்பிங்' செய்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பாதாள சாக்கடை திட்டத்தில் பெரிய குழாய் பதிக்க வேண்டியுள்ளது. ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள கால்வாயில் தேங் கும் தண்ணீரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

