/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்மிக புத்தகங்கள் வெளியீடு கோவை_சிட்டி
/
ஆன்மிக புத்தகங்கள் வெளியீடு கோவை_சிட்டி
ADDED : மே 17, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா அறக்கட்டளை சார்பில், மறைந்த சாமப்பா எழுதிய 108 ஆன்மிக புத்தகங்கள் வெளியீடு மற்றும் ஆன்மிக அன்பர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் ஞானசேகரன் வரவேற்றார். கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் தலைமை உரையாற்றினார்.
நுால்களை கவிஞர் கவிதாசன் வெளியிட்டு பேசுகையில், ''எந்த வேலை செய்தாலும் அதை முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். போனது போகட்டும் இந்த நிமிடத்தில் இருந்து சரி செய்வோம்,'' என்றார்.