sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

/

மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா


ADDED : செப் 22, 2024 03:56 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர் : கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று நடந்த புரட்டாசி திருவிழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து உள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. திருப்பதி கோவிலை போலவே, இக்கோவிலும், ஏழு குன்றுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது.

இக்கோவிலில் புரட்டாசி திருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதர, வெங்கடேச பெருமாளுக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது.

இதையடுத்து, கோவில் வளாகத்தில், காலை 10:00 மணிக்கு, பசூர் மற்றும் பகத்தூர் பஜனை குழுவின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. கோவில் முன்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தாசர்கள் சங்கு, சேகண்டியுடன் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர், கோவை மற்றும் புளியம்பட்டியில் இருந்து, மொண்டிபாளையம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வரும் 28ம் தேதி காலை 4:00 மணிக்கு மகாபிஷேகமும், காலை 10:00 மணிக்கு, பஜனையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us