sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!

/

பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!

பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!

பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!


ADDED : பிப் 07, 2024 10:51 PM

Google News

ADDED : பிப் 07, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில், பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து, பல்வேறு பணிகளுக்கும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் என, பலதரப்பட்ட மக்கள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவில் மார்க்கெட், அரசு அலுவலகம் மற்றும் இங்குள்ள கடைகளில் அதிகப்படியானோர் பணி புரிந்து வருவதால், இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மேலும், பஸ் ஸ்டாண்டினுள் அரசு டவுன் பஸ்கள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணியர், பஸ் எப்போது வரும் என்பது தெரியாமல் குழப்பமடைகின்றனர்.

மேலும், புதிதாக இங்கு வருபவர்கள், பஸ் வரும் நேரம் தெரியாமல் அலைமோதுகின்றனர். பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைத்தால், பயணியரிடையே ஏற்படும் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும்.

எனவே, பஸ் ஸ்டாண்டில் பயணியர் நலன் கருதி, பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us