/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வந்தாச்சு!
/
அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வந்தாச்சு!
அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வந்தாச்சு!
அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வந்தாச்சு!
ADDED : மார் 26, 2025 11:16 PM

கோவை; அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடு, ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் செலுத்தும் வசதி, நடைமுறைப்படுத்தப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 836 டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் மயமாக்கி, மக்களுக்கு பஸ் சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதன் வாயிலாக, 'டிஜிட்டல்' சேவைகளை கோவை பயணிகளுக்கு வழங்க, அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு வசதி மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் செலுத்தும் வசதி திட்டமிடப்பட்டது.
இதற்கான 'டிஜிட்டல்' கருவி, 100 சதவீதம் பெறப்பட்டுள்ள நிலையில், வங்கியுடன் அவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்தன. இதையடுத்து, முதற்கட்டமாக நீண்ட துாரம் பயணிக்கும் பஸ்களில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு நடைமுறை, ஏ.டி.எம்., கார்டு 'ஸ்வைப்பிங்' எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வாயிலாக மக்கள் எளிதில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
முதற்கட்டமாக மொபசல் பஸ்களில், இந்நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சில்லரை பிரச்னை தீரும். பயணிகள், கண்டக்டர்கள் இடையேயான பிரச்னை தீரும். கண்டக்டர்களின் பணியும் எளிதாகும்' என்றார்.