sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சிகளில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் தேவைக்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை

/

ஊராட்சிகளில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் தேவைக்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை

ஊராட்சிகளில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் தேவைக்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை

ஊராட்சிகளில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் தேவைக்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை


ADDED : நவ 22, 2024 10:56 PM

Google News

ADDED : நவ 22, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், குப்பையை தரம் பிரித்து பெறுவதற்கு போதிய துாய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், 65 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு, குப்பையை அகற்றுவது, தரம் பிரித்து உரமாக்குவது, மக்காத குப்பையை உரிய முறையில் மறுசுழற்சி செய்வது, திடக்கழிவு மேலாண்மை என, சுகாதாரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், ஊராட்சிகளிலும் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கிறது. பல கிராமங்களில், குப்பையை தரம் பிரித்து பெறுவதற்கு துாய்மைப் பணியாளர்கள் கிடையாது. இதனால், ஆங்காங்கே சாலையோரம் குப்பை தேக்கமடைந்து, அகற்றப்படாமல் உள்ளது.

ஊராட்சித் தலைவர்கள் கூறியதாவது:

பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தபட்சம், இரண்டு முதல், ஆறு துாய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். குப்பை அள்ளி செல்லும் பேட்டரி வாகனம், ஊராட்சிக்கு ஒன்றிரண்டு மட்டுமே வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில், ஊராட்சி முழுக்க குப்பையை முழுமையாக அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது கடினமாக உள்ளது.

பல ஊராட்சிகளில் குப்பை கொட்ட இடமில்லை. துாய்மை பணியாளர்களுக்கு, 3,500 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதால், பலர் முழு நேரமும் பணிக்கு வருவதில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம், 10 துாய்மை பணியாளர், 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்கென, தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். அப்போது மட்டுமே குப்பையை தரம் பிரித்து பெற முடியும். திறந்தவெளியில் குப்பை கொட்டுவதையும் தடுக்க முடியும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us