/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாள புதுப்பிப்பு பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
/
தண்டவாள புதுப்பிப்பு பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள புதுப்பிப்பு பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள புதுப்பிப்பு பணி; ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஜூலை 30, 2025 09:17 PM
கோவை; சோழவந்தான் - வாடிப்பட்டி ரயில் பாதையில், தண்டவாள புதுப்பிப்பு பணிகள் நடப்பதால், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை - நாகர்கோவில்(16322) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, முதல், வரும், 23ம் தேதி வரை(ஆக., 15ம் தேதி தவிர) திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படாது.இதற்கு பதில், முன்பதிவற்ற சிறப்பு ரயில், திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே, நாளை, முதல், வரும், 23 ம் தேதி வரை(ஞாயிறு, புதன் மற்றும் ஆக., 15 ம் தேதி தவிர) இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் திண்டுக்கலில் இருந்து, மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.