/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
ADDED : டிச 10, 2025 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுாரில் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (10ம் தேதி) இரவு, 9:00 மணி முதல் நாளை மாலை, 5:00 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு வழியாக ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் அடையலாம். மாற்று வழித்தடத்தை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டுமென, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

