sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துடியலுார் அருகே ரயில்வே கேட் சரிந்தது: காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

/

துடியலுார் அருகே ரயில்வே கேட் சரிந்தது: காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

துடியலுார் அருகே ரயில்வே கேட் சரிந்தது: காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

துடியலுார் அருகே ரயில்வே கேட் சரிந்தது: காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

1


UPDATED : நவ 27, 2025 02:16 PM

ADDED : நவ 27, 2025 05:30 AM

Google News

UPDATED : நவ 27, 2025 02:16 PM ADDED : நவ 27, 2025 05:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: கோவை அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, 'கேட்' திடீரென விழுந்தது. வாகன ஓட்டிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இங்குள்ள கேட் கீழே இறக்கப்பட்டு, ரயில்கள் சென்றவுடன், வழக்கம் போல மேலே உயர்த்தப்படும்.

நேற்று முன்தினம் இரவு, 9.00 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி வந்தது. வழக்கம்போல ரயில் கடந்து சென்றவுடன், மூடி இருந்த கேட்டை ஊழியர்கள் மேலே உயர்த்தினர்.

கார் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள், ரயில்வே லெவல் கிராசிங்கை கடந்து செல்ல துவங்கின. அப்போது, மேலே சென்ற கேட், திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இச்சம்பவம், இரு புறங்களிலும் காத்திருந்த வாகன ஓட்டிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், ரயில்வே கேட்டுகளை தூக்கும் பல் சக்கரத்தின் உள்பகுதியில் உள்ள, 'ராடு' போன்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கேட் திடீரென சரிந்து விழுந்தது தெரியவந்தது.

கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், ''இச்சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இரும்பு கேட் விழுந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ரயில்வே லெவல் கிராசிங்கில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளும், பிற உபகரணங்களையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பது அவசியம். இதை ரயில்வே உயர் அதிகா ரிகள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us