sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

/

சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஆக 13, 2025 08:47 PM

Google News

ADDED : ஆக 13, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுாரில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை, நீதிபதிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறப்பு சமரச தீர்வு முகாம், ஜூலை 1 முதல், செப்.30 வரை நடக்கிறது. கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, குடும்ப பிரச்னை, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, செக் மோசடி, பாகப்பிரிவினை, தொழிலாளர் வழக்கு, வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் செய்து வைக்கப்படுகிறது.

சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சூலுார் கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. சூலுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷம் மற்றும் சமரச தீர்வு மைய உறுப்பினர்கள் கவின் பாரதி, விஜயகுமார், வக்கீல்கள் தமிழ்செல்வி, ராஜா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.

சூலுார் கோர்ட் வக்கீல்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us