sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவம்

/

காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி உற்சவம்


ADDED : மே 06, 2025 11:15 PM

Google News

ADDED : மே 06, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.

காரமடை அரங்கநாதர் கோவிலில் அதிகாலை நடைதிறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை செய்யப்பட்டது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையுடன், மேளதாளம் முழங்க, நான்கு ரத வீதிகள் வழியாக, வலம் வந்து கோவிலை அடைந்தார்.

ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். அதைத்

தொடர்ந்து உச்சிக்கால பூஜை சற்று முறைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காரமடையில் ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கத்தின் சார்பில், 39ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடந்தது. சொர்க்கவாசல் வீதியில் அமைந்துள்ள ஜெய மாருதி சேவா சங்கத்தினர், ராமநவமி உற்சவத்தை விமர்சையாக நடத்தினர். சீதாராம, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் விக்ரங்களுக்கு விஷ்வக்க்ஷேனர், ஆராதனம், புன்யா வசனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாப்பிராட்டிக்கும் விவாக சுப முகூர்த்தம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை ஸ்ரீதர் பாகவதர் குழுவினர் மற்றும் ஸ்ரீ பகவான் நாம பஜனை சபாவை சேர்ந்தவர்கள் நடத்தி வைத்தனர். சாற்றுமுறை மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us