/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமியரிடம் அத்துமீறல்; புரோக்கருக்கு 'வலை'
/
சிறுமியரிடம் அத்துமீறல்; புரோக்கருக்கு 'வலை'
ADDED : ஜூன் 09, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் இரு மகள்கள், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே நடந்து சென்றனர்.
அவ்வழியே வந்த அதே பகுதியை சேர்ந்த வீட்டு புரோக்கர் ராபர்ட் ராஜ், 54 என்பவர், சிறுமியரின் கையை பிடித்து இழுத்துள்ளார். சிறுமியர், தங்கள் தாயிடம் கூறினர். அவர், கோவை அனைத்து மகளிர் போலீஸ் (தெற்கு) ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ராபர்ட் ராஜ் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.